Blogger Widgets

logo

Saturday, April 7, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 06-04-2012





அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 06-04-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.




இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. முஹம்மது அவர்கள் "கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.








இதில் சகோதரர் அவர்கள் நாம் எங்கிருந்த போதிலும் நம்மை அல்லாஹ்வின் பார்வை நம்மை விட்டு விலகுவதில்லை. நாம் செய்கின்ற எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் ஏடுகளில் எழுத்ப்படாமல் இல்லை என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து மிகத் தெளிவாக விளக்கினார்கள்.





இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

No comments:

Post a Comment