Sunday, September 25, 2011
பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்,
பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக 23-09-2011 அன்று நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி:
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 23-09-2011 அன்று பஹ்ரைன் மணலத்திண் டிஎன்டிஜே மர்க்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளார் எஸ்.முஹம்மது ஒலி MISc அவர்கள் "நபித் தோழர்களை கண்னியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் நபித் தோழர்ளின் சிறப்புகளை மிக நன்றாக விளக்கிக் கூறினார்கள், மேலும் நாம் எவ்வாறு நபித்தோழர்களை கண்னியப்படுத்த வேண்டும் என்றும் இதை எவ்வாறு மார்க்கம் கடமையாக்கியுள்ளது என்பதையும் மிகவும் அருமையாக விளக்கிக் கூறினார்கள், அதே சமயத்தில் வஹியை மட்டும் பின்பற்றுவதுதான் மார்க்கம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிகழ்ச்சியில் எராளமான ஆண்களும் பெண்களும் இன்னும் மாற்றுக் கருத்துடையவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு சகோதரர் டிஎன்டிஜே நபித்தோழர்களை கண்ணியப்படுத்துகிறது என்றும் டிஎன்டிஜே வைப்ப்ற்றி இதுவரை எண்னியது தவறு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment