Saturday, January 28, 2012
5வது மாபெரும் இரத்ததான முகாம்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக (27-01-2012) நேற்று வெள்ளிக் கிழமை மதியம் 3 மணி முதல் 7.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.
இதில் 97 சகோதர, சகோதரிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் மற்றும் மொழி பேதமின்றி அதிகமான சகோதரர்களும் கலந்து கொண்டு மனித நேயத்தை பகர்ந்தனர்.
இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment