Blogger Widgets

logo

Saturday, January 7, 2012

ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி 06-01-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.




இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. M. S. சுலைமான் பிர்தெளஸி அவர்கள் "பிற மத கலாச்சாரமும் இன்றைய முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.





இதில் சகோதரர் அவர்கள் இன்றைய கால கட்டத்தில் நாகரிகம் என்ற போர்வையில், எப்படியெல்லாம் பிற மத கலாச்சாரத்தை முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் பின்பற்றி வருகிறோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்.





இதிலிருந்து நமது முஸ்லீம்கள் விலக வேண்டும் என்றும், நாம் தான் இதை தெரியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் குழுமியிருந்த சகோதரர்களுக்கு அறிவுரை கூறினார்.




இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

No comments:

Post a Comment