Blogger Widgets

logo

Tuesday, August 2, 2011

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி - நாள் - 1




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அல்லாஹ்வின் மாபெரும் அருள் பெறக்கூடிய புனிதமிக்க ரமளான் மாதத்தின் முதல் நாளான இன்று, கடந்த வருடங்களைப் போல் தமிழ்நாடு தவ்ஹீத் - பஹ்ரைன் மண்டலம் தாயகத்திலிருந்து மாநில பேச்சாளாரான சகோ. முஹம்மது ஒலி அவர்களை அழைத்து ரமளான் மாதம் முழுவதும சொற்பொழிவும் ஏற்பாடு செய்துள்ளது.



இதில், முதல் நோன்பான இன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டு சகோ.முஹம்மது ஒலி அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



இந்த நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்ய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!



இனி வரும் நாட்களில் தினமும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் எங்கள் இணையதளத்தில் இன்ஷாஅல்லாஹ் நேரடி ஒளிபரப்பு செய்ய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment