Blogger Widgets

logo

Friday, August 12, 2011

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 2






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல
சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும்
தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள்
நிகழ்த்தினர்கள்.



மேலும், வியாழக்கிழமையன்று இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவில்
ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.



இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள்
"நபி (ஸல்) அவர்களின் சமூகத்தைச் சாராதவன்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.



அவரை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள்
"வஹீயை மட்டுமே பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி அதில் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகான் முறையில் விளங்குமாறு வந்திருந்த சகோதரர்களுக்கு புரியுமள்வில் எளிய நடையில் விளக்கினார்.



இதைத் தொடர்ந்து குர்ஆனின் 14ஆவது அத்தியாயமான, இப்ராஹீம் என்ற அத்தியாயத்திலிருந்து சகோதர சகோதரிகளை 8 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.



இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2.40 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.



இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

No comments:

Post a Comment