Wednesday, November 9, 2011
சிறப்பு நிகழ்ச்சி - ரிஃபா கிளை (09-11-2011)
அல்லாஹ்வின் திருப்பெயரால்,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று (09-11-2011) நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "மரண்த்திற்க்கு பின்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்ற "இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் அன்றி வேறில்லை" என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்.
இந்த அற்பமான 50 அல்லது 60 வருட வாழ்க்கைகாக நாம் காட்டுகின்ற முக்கியத்துவத்தை விட, மறுமை வாழ்க்கையை நம்பக்கூடிய முஸ்லீம்களான நாங்கள் அதற்க்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து சகோதரர்கள் தங்களது மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment