Saturday, November 19, 2011
வாராந்திர நிகழ்ச்சி - 18-11-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 18-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல வகுப்புகளின் பொருப்பாளர் சகோ. ஜெய்லானி அவர்கள் "நன்மை செய்வதில் நாம் ஏன் விரைவதில்லை?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இவர் தமது உரையில் நாம் இவ்வுலக வாழ்கிற்க்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அதன் கரணத்தால் நன்மை செய்வதில் நாம் முந்திகக்கொள்வதில்லை என்பதை வந்திருந்த அனைத்து சகோதர, சகோதரிகள் புரிந்தி கொள்ளுமளவிற்க்கு மிக எளிய நடையில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment