Saturday, November 26, 2011
குடும்ப ஒன்று கூடல்
அல்லாஹ்வின் திருப்பெயரால்,
முஹர்ரம் தினமான இன்று பஹ்ரைனில் அரசு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து நமது ஜமாஅத் தமிழ் முஸ்லீம் சகோதரர்களில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததது.
அதைத் தொடர்ந்து சகோ.பிஜெ அவர்கள் ஊட்டி தர்பியாவில் உரை நிகழ்த்திய "நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்-ல் இருக்க வேண்டும்?" என்ற உரையின் CD-ஐ Projector உதவி கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உரையில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம், எப்படியெல்லாம் நமது செயல்பாடுகள் இருக்கின்றன, நமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கினார்கள். இதைக் கேட்ட நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் இப்படியெல்லாமா நமது ஜமாஅத் திட்டங்கள் வகுக்கின்றது என்பதை மிக ஆச்சரியத்துடன் கேட்டனர்.
இதன் பிறகு மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியால் நமது தாவா பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற இது பயனுள்ள வகையில் அமையும்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் குடுப்பத்துடன் கலந்து கொண்டு துஆ செய்து நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment